Tuesday 7th of May 2024 01:47:15 PM GMT

LANGUAGE - TAMIL
-
லெபனானில் இரண்டு பாரிய வெடிப்புக்கள்!

லெபனானில் இரண்டு பாரிய வெடிப்புக்கள்!


லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற பாரிய வெடிப்பில் குறைந்தது 10 போ் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோாா் காயமடைந்துள்ளதாக உடனடியாக சம்பவ இடத்தில் இருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிய வெடிப்பு இடம்பெற்ற இடத்துக்கு அருகே ஆங்காங்கே சடலங்கள் சிதறிக் கிடப்பதை சம்பவ இடத்தில் இருந்தவா்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில் காண முடிந்து.

மாலை நடந்த வெடிப்பு தலைநகரின் பல பகுதிகளில் எதி்ரொலித்தது. மேலும் நகர மையப்பகுதியில் கரும்புகை சூழ்ந்திருந்தது. சில உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் பெய்ரூட்டின் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல் தெரிவித்துள்ளன.

குறித்த வெடிப்புச் சம்பவத்தால் குறைந்தது 100 போ் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சா் ஹமாத் ஹாசன் உறுதி செய்துள்ளார்.

இந்தக் பாரிய வெடிப்புக்கான காரணங்களும் உடனடியாகத் தெரியவரவில்லை.


Category: செய்திகள், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE